Kathir News
Begin typing your search above and press return to search.

நகர்ப்புற மேம்பாட்டுக்காக 18 லட்சம் கோடி முதலீடு.. மக்களுக்காக மோடி அரசு செய்த சாதனைகள்..

நகர்ப்புற மேம்பாட்டுக்காக 18 லட்சம் கோடி முதலீடு.. மக்களுக்காக மோடி அரசு செய்த சாதனைகள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Oct 2023 1:34 PM GMT

நகர்ப்புற மேம்பாட்டுக்காக 2014-ம் ஆண்டு முதல் ரூ.18 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்தியாவின் நகர அமைப்புகள் தொடர்பான ஆண்டு ஆய்வின் ஆறாவது பதிப்பான ஏ.எஸ்.ஐ.சி.எஸ்-2023 அறிக்கையை அமைச்சர் இன்று புதுதில்லியில் வெளியிட்டார். இந்த அறிக்கை ஒரு நுணுக்கமான மற்றும் பாராட்டத்தக்க முயற்சி என்று கூறிய அமைச்சர், இந்த அறிக்கையில் 82 நகராட்சி சட்டங்கள், 44 நகர ஊரமைப்பு சட்டங்கள், 176 தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் அறிவிப்புகள், 32 பிற கொள்கை மற்றும் திட்ட ஆவணங்கள், இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 27 கூடுதல் தரவுத்தொகுப்புகள் ஆகியவை உள்ளன என்று குறிப்பிட்டார்.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 10 முக்கிய பரிந்துரைகள் தொடர்பாக, நகர்ப்புற நிர்வாகத்தில் பரவலாக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு கொள்கைகளை வலுப்படுத்தும் என்று அமைச்சர் கூறினார். நகர்ப்புற நிர்வாகத்தில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்ற செயல்திட்டத்தை நோக்கி செயல்படுவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த அறிக்கை அங்கீகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிக்குழு மானியம் 13-வது நிதிக்குழுவில் இருந்து 15-வது நிதிக்குழு வரை 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


2014 ஆம் ஆண்டிலிருந்து, உலகில் எங்கும் இல்லாத வகையில் மிகவும் விரிவான மற்றும் திட்டமிடப்பட்ட நகரமயமாக்கல் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித்திட்டத்தின் கீழ், 1.19 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது என்றும், 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு அதில் 77 லட்சம் வீடுகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News