Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் சம்பவங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது! சாத்தியமான பின்னணி!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் சம்பவங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது! சாத்தியமான பின்னணி!

MuruganandhamBy : Muruganandham

  |  30 March 2021 1:30 AM GMT

2021-ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் சம்பவங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக 2020-ஆம் ஆண்டில் 167 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணைந்தனர். இந்த ஆண்டு தற்போது வரை 20 பேர் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை ஜம்மு - காஷ்மீரில் 43 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் 2020-ல் 58 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 6 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது இளைஞர்கள் மாயமானதாக கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் சில நாள்களில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிவிட்டதாகவும், இந்த ஆண்டில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 20 இளைஞர்களில் 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். அடையாளம் காணப்படாத சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News