Kathir News
Begin typing your search above and press return to search.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், 3வது அலையை எதிர்கொள்ள முடியும் : பிரதமர் உறுதி.!

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், 3வது அலையை எதிர்கொள்ள முடியும் : பிரதமர் உறுதி.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Jun 2021 12:54 PM GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இனி வரும் காலங்களில், நான் மூன்றாவது அலையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இதற்கான தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசின் சார்பில் உறுதி எடுக்கப் பட்டுள்ளது. எனவே நோய் தொற்று காலத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு மேலும் பயிற்சிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்கள பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.


பிரதமர் அவர்கள் இது பற்றிக் கூறுகையில், "பேரிடர் காலங்களில் இருந்த எப்படி மீளுவது? என்பது குறித்து நமது நாட்டிற்கும், முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கற்றுக்கொடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களை தயார்படுத்தும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய திட்டத்தை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், கொரோனாவை எதிர்த்து போராட முன்களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


மேலும் இத்தகைய காலத்தில் மிகவும் தேவையாக இருக்கும் சுமார் 1,500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதியாக கொண்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை போன்று இனி 21ம் தேதி முதல் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கையாளப்படுவார்கள்" என பிரதமர் அவர்கள் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News