Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாப்பு படை அதிரடி : லஷ்கர் இ தொய்பா தளபதி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாதுகாப்பு படை அதிரடி : லஷ்கர் இ தொய்பா தளபதி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ParthasarathyBy : Parthasarathy

  |  2 July 2021 3:13 PM GMT

தொடர்ந்து சில தினங்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து கொன்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டனர். இதில் இரண்டு அதிகாரிகள் காயம் அடைந்தனர். அதே போல் காஷ்மீரில் முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து சுட்டு கொன்றனர். இவ்வாறு இருக்கையில் இன்று காஷ்மீரில், பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சூட்டில் லஷ்கர் இ தொய்பா தளபதி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இது குறித்து காஷ்மீரின் I.G. விஜய் குமார் கூறுகையில் "காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின், ஹன்ஜின் ராஜ்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். தொடர்ந்து, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், லஷ்கர் இ தொய்பா தளபதி (commander) நிஷாஸ் லோன், ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்." என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News