Begin typing your search above and press return to search.
தீவிரவாத செயலில் ஈடுபட்டது உறுதியானது - பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!
By : Kathir Webdesk
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இது புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய ரெய்டுகளை தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Next Story