Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் செமிகண்டக்டர் ஹப்பாக மாறும்: அடித்து சொல்லும் பன்னாட்டு நிறுவனம்!

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் செமிகண்டக்டர் ஹப்பாக மாறும்: அடித்து சொல்லும் பன்னாட்டு நிறுவனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2023 2:19 AM GMT

செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை எடுத்துக் காட்ட, செமிகான் இந்தியா 2022 மாநாடு கடந்த ஆண்டு பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் 2023 மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாட்டில் 23 நாடுகளைச் சேர்ந்த 8,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். செமிகான்இந்தியா 2023-ல் மைக்ரான் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், கேடன்ஸ் மற்றும் ஏஎம்டி போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களின் தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை சங்கமான செமி ஆகியவற்றின் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைசஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி (AMT) மார்க் பேப்பர்மாஸ்டர், செயற்கை நுண்ணறிவு ஊடுருவல் நிலை குறித்தும், இந்தியாவுக்கான அதன் மகத்தான திறன் குறித்தும் பேசினார்.

இந்த துறையில் புதுமைகளை ஏஎம்டி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஏஎம்டிக்கான உலகின் மிகப்பெரிய வடிவமைப்பு மையமாக இந்தியாவை நிறுவவிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

கணினி வடிவமைப்பு மற்றும் பகிர்வு, பேக்கேஜிங் மற்றும் பிசிபி தொழில்நுட்பம் மற்றும் ஐஓடி போன்ற பயன்பாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் செமிகண்டக்டர் தொழில்துறையில் வளர்ந்து வரும் தேவைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

Input From: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News