Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர்: பதுங்கியிருந்த 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர்: பதுங்கியிருந்த 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவம்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Dec 2021 6:36 AM GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய பகுதிகளுக்கு நுழைந்து வருகின்றனர். அது போன்று நுழைபவர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தும், சுட்டுக்கொன்றும் வருகின்றனர். எப்போதும் பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், ஆனந்த்நாக் மற்றும் குல்காம் மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 29) நள்ளிரவு நேரத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்ற நிலையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News