Kathir News
Begin typing your search above and press return to search.

தென்கிழக்காசிய நாடுகளுடனான BIMSTEC மாஸ்டர் திட்டத்தை இறுதி செய்தது இந்தியா!

தென்கிழக்காசிய நாடுகளுடனான BIMSTEC மாஸ்டர் திட்டத்தை இறுதி செய்தது இந்தியா!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 April 2021 4:48 PM IST

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள், இன்று 17வது BIMSTEC அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் தனித்துவமான வலிமையை BIMSTEC கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.


BIMSTEC என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இதில் 1.5 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். 2018 ஆண்டு கணக்கெடுப்பின் படி, இது உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3.5 டிரில்லியன் எனும் அளவில் கொண்டுள்ளது.


"இது எங்கள் வெளியுறவுக் கொள்கையில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றது. மே 2019 இல் எங்கள் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் BIMSTEC தலைவர்களின் பங்கேற்பு அதற்கு ஒரு சான்றாகும்" என்று அவர் மேலும் கூறினார். "உறுப்பு நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புடன் இப்பகுதி விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


மக்கள் மற்றும் பொருட்களின் சுமுகமான எல்லை தாண்டிய இயக்கத்துடன் பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு வலுவான இணைப்பு ஒரு அத்தியாவசிய முன் நிபந்தனையாகும். போக்குவரத்து இணைப்பிற்கான BIMSTEC மாஸ்டர் திட்டத்தை உறுப்பு நாடுகள் இறுதி செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ஜெய்சங்கர் கூறினார்.


BIMSTEC நாடுகளிடையே தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை வலிமைப்படுத்தும் விதமாக, இந்தியாவின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டதால், இனி போக்குவரத்து எளிதாகும். இதன் மூலம் வர்த்தகமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் பொருளாதார பலத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி, "பிரராம்ப்: ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றியபோது, ​​BIMSTEC நாடுகள் இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில் அவர்கள் மனிதவளத்தில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு மற்றும் 3.8 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வலிமையைக் கொண்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News