Kathir News
Begin typing your search above and press return to search.

இக்கட்டான நேரத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்களின் அபார கண்டுபிடிப்பு - புதிய ஆக்சிஜன் விநியோக முறையை உருவாக்கிய DRDO!

இக்கட்டான நேரத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்களின் அபார கண்டுபிடிப்பு - புதிய ஆக்சிஜன் விநியோக முறையை உருவாக்கிய DRDO!
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 April 2021 1:46 AM

மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக SPO2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) சார்ந்து தானியங்கி துணை ஆக்சிஜன் விநியோக முறையை DRDOஉருவாக்கியுள்ளது.

பெங்களூருவில் அமைந்துள்ள DRDO-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ள இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும்.



தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்புமுறை ஒரு வரப்பிரசாதமாக அமையும். கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயலாற்றும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விநியோக அமைப்பு, செயல்திறன் மிக்கதாகவும் விலை குறைவானதாகவும் இருக்கும்.

இதன் மொத்த உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதை யார் வேண்டுமானாலும் எளிதாக இயக்க முடியும் என்பதால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணிச்சுமை குறையும்.

பல்வேறு அளவுகளில் கிடைக்கும் இந்த விநியோக அமைப்பு, தற்போதைய கடினமான காலகட்டத்தில் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை கையாள்வதில், பல்வேறு வகைகளில் இது உதவும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News