Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் முதல் கிராமத்தில் நடைபெற்ற G20 மாநாடு... தொடர் வெற்றியை கொண்டாடி வரும் மோடி அரசு..

இந்தியாவின் முதல் கிராமத்தில் நடைபெற்ற G20 மாநாடு... தொடர் வெற்றியை கொண்டாடி வரும் மோடி அரசு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Sep 2023 1:39 AM GMT

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் 2023 செப்டம்பர் 19 G20 உச்சி மாநாடு மற்றும் "என் மண் என் தேசம்" முன்முயற்சியின் வெற்றிகரமான நிறைவை தில்லி ஆகாஷ்வாணி கொண்டாடியது. 2023, ஜூலை 21 முதல் தில்லி ஆகாஷ்வாணி ஏற்பாடு செய்த தொடர் நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்வு ஒரு அற்புதமான மைல்கல்லைக் குறிக்கிறது. நகர்ப் புறங்களிலிருந்து நேயர்களை கிராமப்புற இந்தியாவின் மையத்திற்கும் அதன் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்திற்கும் நெருக்கமாக கொண்டு வரும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.


கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாப்பதற்கும் மேம் படுத்துவதற்கும் ஆகாஷ்வாணியின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். இந்தியாவின் கலாச்சார பன்முகத் தன்மை குறித்து அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கலாச்சார நாட்டுப்புற நிகழ்ச்சியில் ஆண்களின் வசீகரிக்கும் பௌனா நடனம் மற்றும் மனா கிராமத்தின் திறமையான பெண்களின் பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் உட்பட கிராமத்தின் உள்ளூர் கலைஞர்களின் வசீகரிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மானா கிராமத்தின் பெண்கள் பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பாடல்களில் பங்கேற்றனர், சுற்றுலா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற தலைப்புகளில் அவர்களின் செயல்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்ற அனைவருக்கும் சுவையான உள்ளூர் உணவுகளை தயாரிக்கவும் பெண்கள் முன்முயற்சி எடுத்தனர். ஆகாஷ்வாணி கலைஞர்கள் மற்றும் உத்தரகாண்ட் பெருமைக்குரிய ராக்கி ராவத் மற்றும் அவரது குழுவினர் உத்தரகாண்டின் அழகான நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பாடல்களை வழங்கினர். வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஐ.டி.பி.பி ஜாஸ் இசைக்குழு, தங்கள் இசையால் பார்வையாளர்களை கவர்ந்து, அனைவருக்கும் தேசிய பெருமை உணர்வை ஊட்டியது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News