Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் உயரமான போர்முனை: ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

உலகின் மிக உயரிய போர்முலையில் முதல் பெண் ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

உலகின் உயரமான போர்முனை: ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Jan 2023 4:01 AM GMT

காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனி சிகர பகுதி சுமார் சுமார் 20,000 அடி உயரம் உடையது. இது உலகிலேயே உயரமான போர்முனையாகவும் கருதப்படுகிறது. இங்கு இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் பராசர ஆகியவற்றின் எதிர்ப்பு நிற்பதுடன் போராட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் சியாச்சின் மலைத்தொடரில் முதல் முறையாக கேப்டன் சிவா சௌகான் என்ற இந்திய பெண் ராணுவ அதிகாரி பணி புரியும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இங்கு உள்ள குமார் என்ற காவல் நிலையத்தில் மூன்று மாதங்களுக்கு அவர் பணியில் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது.


இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினியர் பிரிவை சேர்ந்த சிவா சௌகான் என்பவர் தன்னுடைய 11 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்றார். சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் ராணுவம் அதிகாரி என்ற பட்டத்தை தற்போது இவர் பெற்றிருக்கிறார். இவருக்கு இந்திய ராணுவ மந்திரி ராஜ்குமார் சிங் தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார்.


ராணுவத்தின் மீது தீவிரம் ஆர்வம் கொண்ட இவர் ராஜஸ்தானில் இருந்து தன்னுடைய படிப்பிற்காக சென்னை வந்து சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, தற்போது இந்த ஒரு நிலைமையை அடைந்து இருக்கிறார். நாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று முனைப்புடன் ஆண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கு நிகராக தற்பொழுது பெண்களும் பிரதமர் மோடி தலைமையிலான ஆற்றல் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் தான்.

Input & Image courtesy: NDTV News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News