ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் சோதனை வெற்றி!

By : Kathir Webdesk
சிறிய ரக மின்காந்த பீரங்கிகளை ராணுவத்தின் முப்படைகளின் பயன்பாட்டுக்காக டிஆர்டிஓ தயாரித்துள்ளது.
போர்கப்பல்களில் இந்த இஎம்ஆர்ஜி பொருத்தப்பட்டிருக்கும். இதன் குண்டுகள் மணிக்கு 4,500 மைல் வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்தவை. குண்டுகள் லேசர்கள் மற்றும் இயக்க ஆற்றல் மூலம் அதிவேகத்தில் சென்று தாக்கும்.
சுமார் 200 கி.மீ தூரமுள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்தவை. 10 மெகாஜோல்ஸ் திறனுடன் டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இஎம்ஆர்ஜி பீரங்கிகள் ஒரு கிலோ கிராம் குண்டுகளை வினாடிக்கு 2,000 மீட்டர் வேகத்தில் சுடும் திறன் படைத்தவை.
மின்காந்த சக்தியில் இயங்கும் இதன் குண்டுகள், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த இஎம்ஆர்ஜி பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன.
Input From: NewIndian
