Kathir News
Begin typing your search above and press return to search.

2021 ஆண்டின் திருப்பதி உண்டியல் காணிக்கை ₹833.41 கோடி - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

2021 ஆண்டின் திருப்பதி உண்டியல் காணிக்கை ₹833.41 கோடி - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  1 Jan 2022 5:30 AM GMT

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் உண்டியல் காணிக்கையாக கடந்த 2021-ஆம் ஆண்டு ₹833.41 கோடி பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகில் அதிக வருவாய் காணிக்கையாக பெரும் முதல் இந்து மத கோவிலாகும். தற்பொழுது கொரோனோ கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் பக்தர்கள் கூட்டம் இன்றும் வேங்கடவனை தரிசிக்க அலை மோதுகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான காணிக்கை விவரத்தை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "திருப்பதியில் ஏழுமலையானை கடந்த ஆண்டு 1.04 கோடி பக்தர்கள் தரிசித்துள்ளனர். 5.96 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளன. 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கையாக ₹833.41 கோடி தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News