"2024 தேர்தல், 75 தொகுதி டார்கெட் அடிக்கணும்" - யோகி ஆதித்யநாத் மாஸ்டர் பிளான்
By : Mohan Raj
உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 75 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென கட்சியினருக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, 'உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக கடைசி வெள்ளிக்கிழமை தெருக்கள் சாலைகளில் நமாஸ் நடத்தப்படவில்லை, வழிபாட்டுத்தலங்கள் மசூதிகளில் அவர்கள் மத நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியாக நடைபெற்றது மாநிலத்திலிருந்து மதக்கலவரம் நடைபெறவில்லை' என்றார்.
மேலும் பேசிய அவர், 'சட்டசபை தேர்தலில் சிறந்த முடிவுகளை பெற்றோம் அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போது இருந்தே பயணத்தை தயார் செய்யுங்கள்' என உத்தரவிட்டார். மேலும், 'பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அமைய உத்தரப் பிரதேசத்தில் இருந்து 75 இடங்களில் வெற்றி இலக்காக கொண்டு முன்னேற வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.