Kathir News
Begin typing your search above and press return to search.

24 மணிநேரத்தில் விடுதலை!" - மகிழ்ச்சி வெள்ளத்தில் மீனவர்களை தள்ளிய மத்திய நிதி அமைச்சர்"

24 மணிநேரத்தில் விடுதலை! - மகிழ்ச்சி வெள்ளத்தில் மீனவர்களை தள்ளிய மத்திய நிதி அமைச்சர்

SushmithaBy : Sushmitha

  |  20 Nov 2023 5:34 AM GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் விடுதலை அடைந்துள்ளோம் இதற்காக பிரதமருக்கும் மத்திய நிதி அமைச்சருக்கும் நன்றி - விடுதலை பெற்ற மீனவர்கள்

இலங்கை கடற்படையால் 24 மணி நேரத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட 22 பாம்பன் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க அவர்களது குடும்பத்தினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்ற நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு தொடர்பு கொண்டு மீனவர்களின் கோரிக்கையை அங்கு முன் வைத்துள்ளார். இதற்கு அடுத்து வெளியுறவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசு கைது செய்த இந்திய மீனவர்களை விடுவித்தது.

விடுதலையான 22 மீனவர்களும் ராமேஸ்வரம் திரும்பிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர் அப்பொழுது கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் விடுதலை அடைந்துள்ளோம் இதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று மீனவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Source : Thanthi Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News