Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டிற்கு வலுசேர்க்க மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது.!

தற்போது 7வது முறையாக 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் நாட்டில் இருந்து நேற்று வந்து சேர்ந்தது. 3 போர் விமானங்களும் சுமார் 8 ஆயிரம் கி.மீ தூரத்தை இடையில் நிற்காமல் கடந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது.

நாட்டிற்கு வலுசேர்க்க மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது.!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2021 1:29 AM GMT

இந்தியா, பிரான்சிடம் இருந்து ரபேல் வகை போர் விமானங்களை ஒப்பந்தம் செய்து பெறப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 விமானங்களை வாங்குகிறது. இதுவரை 21 விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது 7வது முறையாக 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் நாட்டில் இருந்து நேற்று வந்து சேர்ந்தது. 3 போர் விமானங்களும் சுமார் 8 ஆயிரம் கி.மீ தூரத்தை இடையில் நிற்காமல் கடந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது.


அப்போது விமானங்கள் இடைவிடாமல் பறந்து வந்து கொண்டிருந்தபோது அரபு எமிரேட்சில் நடுவானில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு, இந்தியாவிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சேர்க்கப்பட்டால், இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.


தற்போது 24 ரபேல் போர் விமானங்களால் இந்தியா ராணுவத்திற்கு மேலும் வலுவூட்டும் என கூறப்படுகிறது. இந்திய எல்லைகளில் மிக வேகமாக சென்று கண்காணிக்கவும், எதிரி நாட்டு விமானங்களை அழிப்பதற்கும் ரபேல் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News