Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த திட்டம் - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தனைக்கு விற்பனை.

இந்தியாவில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த திட்டம் - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Jan 2023 12:59 AM GMT

கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால் அதன் விலை உயர தொடங்கியது. விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை மீறியும் கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக ரூ.50க்கு அதிகரித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோதுமை மற்றும் கோதுமை மாவில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவு துறை செயலாளர் சோப்ரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.


அதன்படி கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க மத்திய அரசு தற்போது முடிவு எடுத்து இருக்கிறது. வெளிச்சந்தைகளில் கோதுமைகளை கொண்டு வருவதன் மூலமாக அதனுடைய விலைகளை குறைக்க முடியும். மத்திய அரசு தரப்பில் இது பற்றி கூறுகையில், தனது சேமிப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமைகளை மத்தியில் உணவு அமைச்சகம் வெளிச்சந்தை விற்பனை செய்யும்.


அதன்படி மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகம் அந்த கோதுமைகளை மாவு மில்கள் தனியார் வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். வெளிச் சந்தைகளில் கோதுமை வரத்தை அதிகரித்தது. அதன் விலையை குறைப்பது இதனுடைய நோக்கம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News