Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் தடைபட்ட 35 வருட பாரம்பரிய மாரத்தான் ஓட்டம்.!

கொரோனாவால் தடைபட்ட 35 வருட பாரம்பரிய மாரத்தான் ஓட்டம்.!

கொரோனாவால் தடைபட்ட 35 வருட பாரம்பரிய மாரத்தான் ஓட்டம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Nov 2020 10:17 PM IST

கொரோனா தொற்றுநோய் காரணமாகவும், 1985 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக, இந்திரா மராத்தான் அதன் திட்டமிடப்பட்ட தேதியான நவம்பர் 19 என்று லக்னோவில் நடத்தப்படவில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.

முன்னதாக கடந்த 1990 ஆம் ஆண்டில் ஒரு முறை இந்த ஓட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் அமைப்பாளர்கள் 1991 ஜனவரியில் ஓட்டத்தை நடத்தி, 1990-91 ஆண்டு விளையாட்டை நடத்தி இதை சமன் செய்தனர்.

மறைந்த இந்திரா காந்தியின் நினைவாக 1985ஆம் ஆண்டில் மராத்தான் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில், வெற்றியாளர்களுக்கு ரூ 50,000 ரொக்கப் பரிசும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூ 25,000 மற்றும் ரூ 15,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், பரிசுத் தொகை வெற்றியாளருக்கு ரூ 1 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்தவர்களுக்கு முறையே ரூ 1 லட்சம் மற்றும் ரூ 75,000 வழங்கப்படுகிறது. இது தவிர, 11 ஆறுதல் பரிசுகளாக தலா ரூ 10,000 வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 42.195 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இந்த மராத்தான், நேரு குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ஆனந்த் பவனில் இருந்து தொடங்கி, தெலியர்கஞ்ச், மயோ ஹால் கிராசிங், உயர் நீதிமன்றம், சி.எம்.பி கல்லூரி, அலகாபாத் வேளாண் நிறுவனம், யமுனா பாலம், அனுமன் கோயில் வழியாக மதன் மோகன் மால்வியா மைதானத்தில் முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கும் நாட்டின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களின் நீண்ட நெடிய மரபுகளும் இந்த ஓட்டத்தில் உள்ளன.

"இந்த ஓட்டம் நாட்டின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களின் செயல்திறனைக் கண்டது. கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நெருக்கடி இல்லாதிருந்தால், இந்த ஆண்டிலும் மராத்தான் நடத்தப்பட்டிருக்கும். இது தற்போதைய காலண்டர் ஆண்டில் நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை" என்று அனில் திவாரி மாவட்ட விளையாட்டு அதிகாரி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News