Kathir News
Begin typing your search above and press return to search.

பாக்கிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 4 சிறுவர் - தட்டி தூக்கிய போலீஸ்

கர்நாடகாவில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 4 சிறுவர் - தட்டி தூக்கிய போலீஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Nov 2022 2:07 PM GMT

கர்நாடகாவில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்மங்களூரில் உள்ள பாலை என்ற பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இந்த காபி தோட்டத்தில் பணிபுரியும் நான்கு இளைஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியதை ஆர்ப்பரித்துக் கொண்டாடியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பி உள்ளனர் இது அங்கிருந்தவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது இதனை அடுத்து தோட்டத்தின் மேலாளருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட அவர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.

இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்களுக்கு 18 வயது நிரம்பாத சிறுவர்கள் எனவும் அசாம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கூறியதாக தெரிகிறது. இவர்களை கைது செய்து சட்டவிரோதமாக குடியேறியவர்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது காவல்துறை.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News