Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானம் மூலமாக ஆயுதம் வருகிறதா? வெளிவரும் பகீர் தகவல்!

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானம் மூலமாக ஆயுதம் வருகிறதா? வெளிவரும் பகீர் தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  6 May 2022 10:14 AM GMT

காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 4 பேரை ஹரியானா மாநில போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், கர்னாலில் 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர், பூபிந்தர் என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது குறித்து ஹரியானா மாநில போலீசார் தீவிர விசராணையில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 31 தோட்டாக்கள், 6 செல்போன்கள், ஒரு லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் பெரோஸ்பூர் மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்ஜிந்தர் சிங் ரிண்டாவால் என்பவர் ஆளில்லா விமானங்கள் மூலமாக ஆயுதங்கள் வழங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் இவர்கள் யார், யாருக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளனர் என்பன குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனால் எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி ட்ரோன் மூலமாக ஆயுதம் இந்தியாவுக்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News