Begin typing your search above and press return to search.
4வது இந்தியா மொபைல் மாநாடு.. இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!
4வது இந்தியா மொபைல் மாநாடு.. இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!

By :
4-வது இந்தியா மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவக்கி வைக்கிறார். இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது இந்தியா மொபைல் மாநாடு டெல்லியில் இன்று துவங்குகிறது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
30 நாடுகளை சேர்ந்த சுமார் 210 பேச்சாளர்களும், 150 நிறுவனங்களும், 3000 பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
Next Story