Kathir News
Begin typing your search above and press return to search.

55 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

நாடு முழுவதும் இதுவரை 55 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

55 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

ThangaveluBy : Thangavelu

  |  17 Aug 2021 7:43 AM GMT

நாடு முழுவதும் இதுவரை 55 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளின் அளவு சாதனை படைக்கின்ற அளவாக 55 கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்பட்டது. தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் 10 கோடியை எட்ட இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 85 நாட்கள் ஆனது. இதனிடையே ஆகஸ்ட் 14ம் தேதி போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 54 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத எண்ணிக்கையாக நேற்று மட்டும் 86.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2825105

Next Story
கதிர் தொகுப்பு
Trending News