Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம் உட்பட 23 மாநிலங்களுக்கு 7வது சுற்று ஜி.எஸ்.டி இழப்பீட்டு பற்றாக்குறை விடுவிப்பு.!

தமிழகம் உட்பட 23 மாநிலங்களுக்கு 7வது சுற்று ஜி.எஸ்.டி இழப்பீட்டு பற்றாக்குறை விடுவிப்பு.!

தமிழகம் உட்பட 23 மாநிலங்களுக்கு 7வது சுற்று ஜி.எஸ்.டி இழப்பீட்டு பற்றாக்குறை விடுவிப்பு.!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  15 Dec 2020 2:26 PM IST

7வது வார தவணை ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, மாநிலங்களுக்கு 6,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், 23 மாநிலங்களுக்கு 5,516.60 கோடி ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்களான டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மத்திய பிரதேசங்களுக்கு ரூ .483.40 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவை ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக வருவாயில் இடைவெளி இல்லை.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக வருவாயில் 1.10 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய அரசாங்கம் அக்டோபரில் சிறப்பு கடன் வாங்கும் சாளரத்தை அமைத்தது. கடன் ஏழு சுற்றுகளில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அத்தகைய நிதிகளின் 7 வது தவணை ஆகும். இதுவரை, சிறப்பு கடன் சாளரம் மூலம் மத்திய அரசு ரூ .42,000 கோடியை கடன் வாங்கியுள்ளது.

இது தவிர, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ. 9627 கோடி கடனாகப் பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூ. 2511.68 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம், மத்திய அரசு இந்தக் கடனை வாங்குகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News