Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் அதிரடியாக சுட்டுக்கொலை.!

இந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் அதிரடியாக சுட்டுக்கொலை.!

இந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் அதிரடியாக சுட்டுக்கொலை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 6:35 PM GMT

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகவே வைத்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் அவ்வப்போது தக்க பதிலடி அளித்து வருகின்றனர். எனினும், பாகிஸ்தான் திருந்தியபாடில்லை. அவர்களின் வழியிலேயே இந்திய ராணுவத்தினர் பதிலடி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பூஞ்ச், கெரன் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்மீறி தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய வீரர்கள் ஓடஓட விரட்டி அடிப்பார்கள் என இந்திய குடிமக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News