Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடி குண்டு வீச்சு: பீகாரில் பதற்றம்!

முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடி குண்டு வீச்சு: பீகாரில் பதற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 April 2022 1:57 PM GMT

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், நாளந்தா நகரில் ஜன்சபா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பங்கேற்றிருந்த மேடை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News