Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை - வலியுறுத்தும் இந்தியா.!

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை - வலியுறுத்தும் இந்தியா.!

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை - வலியுறுத்தும் இந்தியா.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Nov 2020 12:00 PM IST

பிரதமர் இன்று வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியத்தை வாதிட்டார். பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கியது.

இன்று "உலகளாவிய ஸ்திரத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி" என்ற தலைப்பில் ரஷ்யா நடத்தும்,.12வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் பிரதமர் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானைப் பற்றிய வெளிப்படையான குறிப்பில், பிரதமர் மோடி பயங்கரவாதம் 'மிகப்பெரிய சவால்' என்றும், பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக செயல்பட பிரிக்ஸ் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"பயங்கரவாதம் இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினையாகும். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பையும் மற்றும் ஆதரவையும் வழங்கும் நாடுகளும் சமமாக குற்றம் சாட்டப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த சவாலை நாம் கூட்டாக எதிர்கொள்கிறோம்"என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்களின் போது சர்வதேச சமூகத்திற்கு இந்தியாவின் பங்களிப்பைக் குறிப்பிடுகையில், இந்தியாவின் மருந்தியல் துறையின் வலிமை காரணமாக, ஊரடங்கு காலத்தில் 150க்கும் அதிகமான நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிந்தது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் மனிதகுலத்திற்கும் அதேபோன்ற வழியில் உதவும் என்று அவர் பிரிக்ஸ் நாடுகளுக்கு உறுதியளித்தார்.

கடைசியாக, 2021 ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்ஸ் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகளில் டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை தனது நாடு ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News