2,000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் - அக்னி பிரைம் ஏவுகணை பற்றி தெரியுமா?
By : Kathir Webdesk
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்பகுதியில் புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை சோதித்து பார்க் கப்பட்டது. இந்த ரக ஏவுகணை 2,000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்லது.
ரயில், சாலை உட்பட எந்த இடத்தில் இருந்தும் ஏவ முடியும். நாட்டின் எந்தப் பகுதிக்கும் உடனடியாக கொண்டு செல்ல முடியும். நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைக்க முடியும். அக்னி -3 ரக ஏவுகணையின் எடையை விட அக்னி பிரைம் ஏவுகணையின் எடை 50 சதவீதம் குறைவு.
திட உந்துசக்தியுடன் சீறி பாயக் கூடியது. அதிநவீன ரேடார்கள் மூலம் அக்னி பிரைம் ஏவுகணை செல்லும் பாதையை கண்காணிக்க முடியும். அதை வழிநடத்தவும் முடியும். இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 3-வது முறையாக சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும்.
இதுவரை 1 முதல் 5 வரை என திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் ராணுவத்தில் உள்ளன. அடுத்தகட்டமாக அக்னி ஏவுகணை-6 விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Input From: Hindu Tamil