Kathir News
Begin typing your search above and press return to search.

அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

ThangaveluBy : Thangavelu

  |  19 Jun 2022 1:03 PM GMT

விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்கள் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அக்னிபத் வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அதே போன்று மத்திய அமைச்சகத்தில் பல்வேறு துறைகளில் அக்னிபாத் வீரர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தற்போது விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News