Kathir News
Begin typing your search above and press return to search.

வாரணாசியில் மேயர்கள் மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

உத்தரப்பிரதேசம், வாரணாசியில் இன்று அகில இந்திய மேயர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அது மட்டுமின்றி புதிய நகர்ப்புற இந்திய என்ற மையபொருளில் பிரதமர் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் மேயர்கள் மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

ThangaveluBy : Thangavelu

  |  17 Dec 2021 4:17 AM GMT

உத்தரப்பிரதேசம், வாரணாசியில் இன்று அகில இந்திய மேயர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அது மட்டுமின்றி புதிய நகர்ப்புற இந்திய என்ற மையபொருளில் பிரதமர் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நகர்ப்புற வளர்ச்சிப் பணியில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்துக்காட்டுகின்ற கண்காட்சியும் டிசம்பர் 17 முதல் 19 வரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மேயர்களும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்த விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News