Kathir News
Begin typing your search above and press return to search.

மசூதிகளில் ஒலிப்பெருக்கி வைப்பது அடிப்படை உரிமை இல்லை - அலகாபாத் நீதிமன்றம் அதிரடி!

மசூதிகளில் ஒலிப்பெருக்கி வைப்பது அடிப்படை உரிமை இல்லை - அலகாபாத் நீதிமன்றம் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  7 May 2022 11:36 AM GMT

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் வைப்பது அடிப்படை உரிமை இல்லை என்று அலகாபாத் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு கூறியுள்ளது.

மசூதியில் ஒலிபெருக்கிகள் பொருத்துவதற்கு உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கியில் பாங்கு முழங்குவது அடிப்படை உரிமையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.

முதன் முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஜ் தாக்கரே பாங்கு முழக்க ஒலிபெருக்கிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முழக்கத்தை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களிலும் ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும், ஒலிபெருக்கிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதன்படி கோயில், மசூதிகள், சர்ச் உள்ளிட்டவைகளில் இருந்து உடனடியாக ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஒலிபெருக்கிகளின் ஓசைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் பதான்யூவின் நூர் மசூதியின் முத்தவல்லியான மவுல்வி இர்பான் என்பவர் இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அளித்தார். மனுவில் தமது மசூதியில் பாங்கு முழக்கத்திற்காக ஒலிபெருக்கிகளை பொருத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்தது. அப்போது அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கான காரணத்தையும் தெரிவித்தனர். ஒலிபெருக்கிகளில் பாங்கு முழக்கம் என்பது அடிப்படை உரிமை கிடையாது என்ற தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்புக்கு இந்துக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News