Kathir News
Begin typing your search above and press return to search.

"பேச்சு நடத்தியதெல்லாம் அந்த காலம், இனி ''சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தான் !" - பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமித்ஷா !

பேச்சு நடத்தியதெல்லாம் அந்த காலம், இனி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தான் !  - பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமித்ஷா !

DhivakarBy : Dhivakar

  |  15 Oct 2021 4:08 AM GMT

''சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் போன்ற பதிலடியைக் கொடுப்போம்,'' என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்

கோவாவில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார் "முன்பெல்லாம் எல்லையில் ஏதாவது தாக்குதல் நடந்தால், உடனே அது குறித்து பேச்சு நடத்தப்படும். ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று பதிலடியைக் கொடுப்போம் என்பதை நாம் உணர்த்தியுள்ளோம். நம் எல்லையில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால், அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கர் இந்த முக்கியமான, உறுதியான நடவடிக்கையை எடுத்தனர்.பயங்கரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்றுத் தந்துள்ளோம். எல்லையில் மீண்டும் ஏதாவது தாக்குதல் நடந்தால், மேலும் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதற்கு தயாராக உள்ளோம்." இவ்வாறு அமித்ஷாத் பேசினார்.

இந்த அதிரடி எச்சரிக்கை பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது.

Dinamalar

Image : Scroll.in

Next Story
கதிர் தொகுப்பு
Trending News