Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் ஒரே நாளில் 13,451 பேருக்கு கொரோனா உறுதி !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,42,15,653 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 13,451 பேருக்கு கொரோனா உறுதி !

ThangaveluBy : Thangavelu

  |  27 Oct 2021 7:06 AM GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,42,15,653 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 585 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,55,653 ஆக உயர்ந்துள்ளது.

அதே போன்று இன்று 14,021 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,35,97,339 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் 1,62,661 பேர் உள்ளனர். கடந்த 242 நாளில் இதுவே குறைந்த அளவு ஆகும். இதுவரை கொரோனா தடுப்பூசி 100 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News