Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் எல்லையில் நுழைய முயன்ற தீவிரவாதியை சுட்டுக்கொன்ற ராணுவம்!

காஷ்மீர் எல்லையில் நுழைய முயன்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர் எல்லையில் நுழைய முயன்ற தீவிரவாதியை சுட்டுக்கொன்ற ராணுவம்!

ThangaveluBy : Thangavelu

  |  31 Aug 2021 6:34 AM GMT

காஷ்மீர் எல்லையில் நுழைய முயன்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தான் ஒட்டி ஜம்மு காஷ்மீர் இருப்பதால் அடிக்கடி தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அது போன்றவர்களை நுழைய விடாமல் பாதுகாப்பு படையினர் நாட்டை இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி வழியாக தீவிரவாதி ஒருவன் இந்திய எல்லையில் நுழைய முயற்சி செய்துள்ளான். இதனை பார்த்த பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து அவனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இறந்த தீவிரவாதியிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். மேலும் யாராவது அப்பகுதியில் மறைந்துள்ளனரா என்று பாதுகாப்பு படையினர் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Polimer

https://www.polimernews.com/dnews/154421/காஷ்மீரில்-எல்லை-தாண்டிநுழைய-முயன்ற-தீவிரவாதிசுட்டுக்-கொலை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News