அக்னிபத் போராட்டத்தில் ஈடுபட்ட நக்சல் கைது, மூத்த தலைவர்கள் தொடர்பா - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
அக்னிபத் போராட்டத்தை தூண்டிய நக்சல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

By : Mohan Raj
அக்னிபத் போராட்டத்தை தூண்டிய நக்சல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அக்னிபத் என்ற முற்படைகளுக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தது இந்த போராட்டத்தின் போது ரயில்களுக்கு தீ வைத்து வன்முறை பரவியது.
இந்த வன்முறையால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்கள், 2000-க்கும் மேற்பட்ட ரயில்கள் சேதம் அடைந்தன இந்நிலையில் பீகாரின் லக்கிம்பூர் நகரில் மனஷியாம் தாஸ் என்கின்ற நக்சலைட் பதுங்கி இருப்பதாக பிகார் போலீசாருக்கு தெலுங்கானா மாநில போலீசார் தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகள் நேற்று முன்தினம் நக்சல் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பீகார் போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியுள்ளதாவது, 'கைது செய்யப்பட்ட மனுஷியாம் தாஸ் நக்சலைட் அமைப்புடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தவர், இவருக்கு மூத்த தலைவர்களுடன் தொடர்பு உள்ளது விசாரணை தெரிய வந்துள்ளது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ரயில்களுக்கு தீ வைக்கும் படி போராட்டக்காரர்களை இவரும் இவருக்கு தொடர்புடைய சிலரும் தூண்டிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்' எனவும் தெரிவித்துள்ளனர்.
