Kathir News
Begin typing your search above and press return to search.

மைனர் இந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்த ஜிகாதி கும்பல் - தற்கொலை செய்வது போல போலி வீடியோ வெளியிட்டு நேரில் வர வைத்த கொடுமை!

Arshad Khan and his friends gang-rape a minor Hindu girl and slit her throat

மைனர் இந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்த ஜிகாதி கும்பல் - தற்கொலை செய்வது போல போலி வீடியோ வெளியிட்டு நேரில் வர வைத்த கொடுமை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 March 2022 9:25 AM IST

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 17 வயது மைனர் இந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் அர்ஷத் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரையும் போலீசார்,கைது செய்தனர் .

24 வயதான கான் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர். வெளிப்படையாக போதைப்பொருள் எடுத்துக்கொள்கிறார். கையில் ரிவால்வருடன் சுற்றித் திரிகிறார். அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்தார். அதில் இருவரும் காதலித்தனர்.

தனது கோரிக்கைகள் நிறைவேறாத போதெல்லாம் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமியை மிரட்டுவதை கான் வழக்கமாக கொண்டிருந்தார்.

போலீஸ் விசாரணையின்படி, கான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டு சிறுமியை தனது இடத்துக்கு வர வைத்துள்ளான். சிறுமி தன்னை சந்தித்தபோது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அவர் மறுத்துவிட்டார்.உடனே தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கழுத்தை அறுத்தார்.

சிறுமி வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் தேடினர். அஜ்மீர் மாவட்டம், துவாரியா கிராமத்திற்கு அருகில், அவரது வீட்டிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில், நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் அவரையும் அவரது சக குற்றவாளிகளையும் அஜ்மீர் ரயில் நிலையத்தில் பிடித்து அவர்களது காரை பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்கக் கோரி குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். எஸ்டிஎம், கிராமப்புற ஏஎஸ்பி விகாஸ் சங்வான் சம்பவ இடத்திற்கு வந்தார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News