Kathir News
Begin typing your search above and press return to search.

31 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்ட இந்திய சந்தை - உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையாக உருவெடுத்த சாதனை..!

At 87%, India has the highest FinTech adoption rate in the world against the global average of 64%

31 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்ட இந்திய சந்தை - உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையாக உருவெடுத்த சாதனை..!
X

MuruganandhamBy : Muruganandham

  |  2 Oct 2021 7:33 AM IST

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறும் என அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். நிதி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் உலக சராசரி 64% ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் இது 87% ஆக அதிக அளவில் உள்ளது," என்றார்.

மே 2021 நிலவரப்படி, இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண தளம் 224 வங்கிகளின் பங்களிப்போடு $68 பில்லியன் மதிப்பிலான 2.6 பில்லியன் பரிவர்த்தனைகளை கண்டுள்ளது. ஆகஸ்ட் 2021-ல் இது வரை இல்லாத அளவில் 3.6 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது" என்று திரு கோயல் கூறினார். "கடந்த ஆண்டு 2 டிரில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ஏஈபிஎஸ் எனப்படும் ஆதார்-இயக்கப்பட்ட கட்டண முறைமை மூலம் செயல்படுத்தப்பட்டன," என்று அவர் மேலும் கூறினார்.

பெருந்தொற்றின் போது இந்தியாவின் நிதி தொழில்நுட்ப துறை மக்களுக்கு பேருதவி புரிந்ததாகவும், ஊரடங்கு மற்றும் கொவிட் இரண்டாவது அலையின் போது வீட்டில் இருந்தாவாறே பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவியதாகவும் அமைச்சர் கூறினார்.

தேசிய அகண்ட அலைவரிசை திட்டத்தின் கீழ் விரைவில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் அதிவேக இணைய வசதி கிடைக்கும். மேலும், இந்த சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவை ஃபின்டெக் புதுமைகளின் மையமாக மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

இந்திய ஃபின்டெக் சந்தைகளில் புது நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன என்றும் இந்தியாவின் சந்தை தற்போது 31 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், 2025-க்குள் 84 பில்லியன் டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News