Kathir News
Begin typing your search above and press return to search.

ATM பரிவர்த்தனைகளில் விரைவில் அமலுக்கு வரும் மாற்றம் - RBI கூறிய தகவல் என்ன.!

ATM பரிவர்த்தனைகளில் விரைவில் அமலுக்கு வரும் மாற்றம் - RBI கூறிய தகவல் என்ன.!

ATM பரிவர்த்தனைகளில் விரைவில் அமலுக்கு வரும் மாற்றம் - RBI கூறிய தகவல் என்ன.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 9:10 PM IST

பொதுவாக, நமது வங்கிக் கணக்கிலிருந்து ATM மூலமாகப் பணம் எடுப்பதற்குக் குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெவ்வேறு வங்கியைப் பொறுத்து வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதே வங்கி ATM எந்திரத்தில் நீங்கள் பணம் எடுத்தால் இத்தனை முறை இலவசம் என்றும், அதைத் தாண்டி பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கும் என்ற நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால், இனி நீங்கள் 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே, கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை தற்போது அமலுக்கு வரவுள்ளது. இது உங்களது ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளில் சேர்க்கப்படாது என்பதை RBI தரப்பில் தெரிவித்துள்ளது.



அதாவது இந்த புதிய விதிமுறைப்படி, நீங்கள் ATM எந்திரத்தில் இருந்து ஐந்தாயிரத்துக்கும் எடுத்தால் மட்டுமே இது பொருந்தும். நீங்கள் ஒரு நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 24 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். தற்போது, ATM மில் இருந்து ஐந்து முறை நீங்கள் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதன் பின்னர், ஆறாவது பரிவர்த்தனைக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ATM கட்டணம் தொடர்பாக மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குழு அதன் பரிந்துரைகளைத் தற்போது சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் வங்கிகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ATM கட்டணத்தை மாற்றலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.



பெரும்பாலான மக்கள் இங்கு சிறிய தொகையை மட்டுமே ATM களில் எடுக்கின்றனர். எனவேதான் ரூ.5,000க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்போது சிறிய நகரங்களில் ஐந்து முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். புதிய பரிந்துரையின்படி, சிறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்ற வங்கிகளின் ATM களில் ஒவ்வொரு மாதமும் ஆறு முறை பணம் எடுக்க சலுகை கிடைக்கும்.

மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் மூன்று முறை ATM களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு நான்காவது முறையாகப் பணம் எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News