சல்மான் கான் போதை பொருள் பயன்படுத்தியது பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாபா ராம்தேவ்
சல்மான் கான் போதைப்பொருள் வைத்திருந்ததாக யோகா குரு பாபா ராம்தேவ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
By : Mohan Raj
சல்மான் கான் போதைப்பொருள் வைத்திருந்ததாக யோகா குரு பாபா ராம்தேவ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் நகரில் போதைப் பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும் போது, 'நடிகர் சல்மான்கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் அமீர் கானை பற்றி எனக்கு தெரியாது' என கூறினார்.
நடிகர் ஷாருக்கானின் குழந்தை கூட போதைப்பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்துக் கொண்டால் கடவுளுக்கு மட்டுமே அவர்களை பற்றி தெரியும்' எனக் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 'திரைத்துறையில் முழுவதும் போதைப் பொருள் விளையாடுகிறது, அரசியலில் கூட போதை பொருட்கள் உள்ளன மேலும் தேர்தலின் போது மதுபானம் வெளியே வைக்கப்படுகிறது ஒவ்வொருவரும் போதை பொருளுக்கு அடிமையாவதிலிருந்து விடுபட வேண்டும் நாம் ஒரு தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக நாம் ஒரு இயக்கம் தொடங்குவோம்' என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.