Kathir News
Begin typing your search above and press return to search.

முகநூல் பதிவுக்காக இந்து பெண்ணை கைது செய்த அட்டூழியம்!

முகநூல் பதிவுக்காக இந்து பெண்ணை கைது செய்த அட்டூழியம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2022 8:46 AM IST

மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வன்முறைக்கு மத்தியில், இந்து பெங்காலி பெண்ணை மேற்கு வங்க காவல்துறை கைது செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெர்ஹாம்பூர் உட்பிரிவின் பெல்டங்கா காவல் நிலையப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடந்த வன்முறையைப் பார்த்து, அந்த பெண் தனது கருத்தை பேஸ்புக்கில் பதிவு செய்தார்.

அந்த பதிவை பார்த்த இஸ்லாமியர்கள், பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஒன்று திரண்டு வந்தனர். பெண்ணைக் கைது செய்ய காவல்துறையினரை கட்டாயப்படுத்தினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து சிறுமியை போலீஸ் சிறையில் அடைத்தது. இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கவில்லை.

அந்த பெண் சட்ட உதவி பெறுவது குறித்து இதுவரை எந்த செய்தியும் இல்லை. அவளுடைய வயது உறுதிப்படுத்தப்படவில்லை. மேற்கு வங்க காவல்துறை இஸ்லாமிய கும்பலைச் சேர்ந்த எவரையும் கைது செய்ததாக எந்த செய்தியும் இல்லை.

Inputs from: Hindupost

Next Story
கதிர் தொகுப்பு
Trending News