Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் நீடிப்பு - பின்னணி என்ன?

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டு இருக்கிறது.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் நீடிப்பு - பின்னணி என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Jan 2023 2:25 AM GMT

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நடக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று இருந்தது. கூட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டாவின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதை ஒட்டு கட்சியின் முன்னாள் தலைவர் அமித்ஷா நிருபர்களிடம் பேசுகையில், கட்சி தலைவரின் பதவியில் ஜே.பி நாட்டா 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிப்பார்.


அதற்கான தீர்மானம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தார். இதை செயற்குழு தலைவர் ஒரு மனதுடன் வழிமொழிகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்களை காட்டிலும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பெற்று தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தால் பொருத்தவரையில் அவருக்கு ஒரு காலத்தில் ஆட்சி அமைப்பில் மக்கள் பணியில் இணைந்தார். அவரது தலைமையில் கட்சி பல மாநிலங்கள் நடந்த சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நட்டா அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் பா.ஜ.க தலைவர் இருந்தார்.


இந்நிலையில் பதவிக்காலம் நீடிக்கப்பட்டு ஜூன் மாதம் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இது போன்று தான் அப்பொழுதும் கட்சித் தலைவராக இருந்த அமித்ஷா பதவி காலமும் நீடிக்கப்பட்டது. அவரது தலைமையில் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்தது தற்போது நினைவு கூறப்பட்டது. அவரது வழியில் தான் தற்போது ஜே.பி நட்டாவிற்கும் பதவி நிர்வாகம் வழங்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News