Begin typing your search above and press return to search.
டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு.. என்.ஐ.ஏவுக்கு மாற்றிய மத்திய உள்துறை அமைச்சகம்.!
டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு.. என்.ஐ.ஏவுக்கு மாற்றிய மத்திய உள்துறை அமைச்சகம்.!
![டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு.. என்.ஐ.ஏவுக்கு மாற்றிய மத்திய உள்துறை அமைச்சகம்.! டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு.. என்.ஐ.ஏவுக்கு மாற்றிய மத்திய உள்துறை அமைச்சகம்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/a4c4fbcc8b05156eb279d2923cd1e317.jpg)
By :
கடந்த மாதம் ஜனவரி 29ம் தேதி டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே மிகக்குறைந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 4 கார்கள் சேதாரமடைந்தது.
இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பு சம்மந்தமாக என்ஐஏ தனது விசாரணையை தொடங்க உள்ளது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும் தூதரகம் அருகிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Next Story