Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெய் ஸ்ரீராம் என்று வாழ்த்தியதற்காக மாணவர்களை தண்டித்த கிறிஸ்தவ பள்ளி!

Boys greet each other with Jai Shri Ram, Christian school makes them write apology letter

ஜெய் ஸ்ரீராம் என்று வாழ்த்தியதற்காக மாணவர்களை தண்டித்த கிறிஸ்தவ பள்ளி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 March 2022 5:50 PM IST

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களான கிருஷ்ண பிரசாத்தும், ஷ்லோக் சவுத்ரியும் மார்ச் 11ஆம் தேதி, ஜெய் ஸ்ரீராம் என்று கூறி ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டனர். அவர்களை தண்டிக்கும் விதமாக ஆசிரியர் கல்பேஷ் பாகேல் தனியாக அழைத்துச்சென்றார். மன்னிப்புக் கடிதமும் எழுத வைத்தார். "நிறுவனத்தின் விதிகளுக்கு எதிராக மத முழக்கங்களை எழுப்பியதற்காக" அவர்கள் தண்டிக்கப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது .

பள்ளியின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த பெற்றோர்கள் , விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) வாபி பிரிவின் துணைத் தலைவர் நரேந்திர பயக்கை அணுகினர் . பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் விஎச்பியும் சேர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் பள்ளி வளாகத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.




எங்கள் செயலால் உங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியது. ஜெய் ஸ்ரீராம் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்துவது இந்துக்களின் நீண்டகால பாரம்பரியம். இன்னும் சிலர் தங்கள் மத உடையை கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் என்று கோரும் போது, ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதால் தண்டிக்கப்பட்டது, குழந்தைகள் அதைப் பயன்படுத்துவதில் தவறு என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். எண்ணத்தை உருவாக்கினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News