Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் : என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை !

Breaking News.

காஷ்மீர் : என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை !

G PradeepBy : G Pradeep

  |  20 Aug 2021 10:13 AM GMT


காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயற்சிக்கும் போது துப்பாக்கி சண்டை நடக்கிறது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்படுகிறார்கள்.

இந்த நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் பாம்போரில் உள்ள குரூவ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2 பேரின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது பற்றி கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Image Source : டவ்ன்

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News