Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 3வது அலை.. மாநிலங்களை அலார்ட் செய்த மத்திய அரசு.!

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையைத் தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா 3வது அலை.. மாநிலங்களை அலார்ட் செய்த மத்திய அரசு.!

ThangaveluBy : Thangavelu

  |  15 July 2021 4:05 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையைத் தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நெரிசலான இடங்களை ஒழுங்குபடுத்தவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு கடுமையான வழிமுறைகளை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றின் 3வது அலை ஏற்கனவே பல்வேறு நாடுகளில் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுக்போக்குவரத்து, மலைவாசஸ்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதையும், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத நிலையை அந்தச் சுற்றறிக்கையில் எடுத்துக் காட்டியுள்ளது.


இதன் காரணமாக 3வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சுற்றறிக்கையில் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News