சண்டிகர் விமான நிலையத்திற்கு பகவத் சிங் பெயர் - பிரதமர் மோடியை பாராட்டி தள்ளிய பஞ்சாப் முதல்வர் பகவத் மான்
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்பட்டதற்கு பிரதமர் பஞ்சாப் முதல்வர் பிரதமர் மோடிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்பட்டதற்கு பிரதமர் பஞ்சாப் முதல்வர் பிரதமர் மோடிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுகையில் சமீபத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலிகளை பற்றி பேசினார். தொடர்ந்து பேசியவர் சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முடிவு செய்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் முதல்வர் பகவத்மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'ஹரியானா சிவில் விமான போக்குவரத்து மந்திரி, நான் என இருவரும் சேர்ந்து பரஸ்பரம் மத்திய விமான அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம் அதில் வருகிற 28ஆம் தேதி பகவத்சிங் பிறந்தநாள் வருவதற்கு முன்பு அந்த பேரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். பிரதமர் மோடி மங்கி பாத் நிகழ்ச்சியில் அந்த பேர் மாற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதற்கான நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.