Kathir News
Begin typing your search above and press return to search.

உடனடி கடன் வழங்கும் செயலியை இயக்கியதற்காக நான்கு பேரை சென்னை காவல் கைது!

உடனடி கடன் வழங்கும் செயலியை இயக்கியதற்காக நான்கு பேரை சென்னை காவல் கைது!

உடனடி கடன் வழங்கும் செயலியை இயக்கியதற்காக நான்கு பேரை சென்னை காவல் கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  3 Jan 2021 6:49 PM GMT

சனிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்ததில் இரண்டு சீனர்கள் மற்றும் பல இந்தியர்களை உடனடி கடன் வழங்கும் செயலியைப் பயன்படுத்தியதற்காகக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சீனாவில் இருந்து இயக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு இந்தியர்கள் அந்த செயலியின் பயன்பாட்டைப் பெங்களூருவில் இருந்து இயக்குகின்றனர் மற்றும் அவர்கள் இணையத்தில் உடனடியாக கடன் வழங்குவதற்காக 100 க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.

மேலும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் ஒரு வாரத்திற்குள் 10 பேருக்கு உடனடி கடன் வழங்கியிருக்க வேண்டும் மற்றும் அவர்கள் அதனைச் செய்யத் தவறினால் பணி நீக்கம் செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளனர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனர்கள் இந்த கால் சென்ட்டரை இரண்டு இந்தியர்களின் உதவிகளுடன் செய்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் டிசம்பர் 31 2020 மற்றும் ஜனவரி 1 2021 இல் கைது செய்யப்பட்டதாகச் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கையானது கணேசன் என்பர் தான் இணையத்தில் வாங்கிய உடனடி கடனுக்கு அதிக வட்டி திருப்பி செலுத்தக் கோரி அச்சுறுத்துவது மற்றும் துன்புறுத்துவதாகவும் மற்றும் அதனால் தான் மனவுளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி அளித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்டதாக, ஆணையர் பத்திரிகைக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு சீன நபர் ஒருவர்க் கால் சென்டரை இயக்கி வருவதாக தெரியவந்துள்ளது. "இந்தியர்களை மட்டும் குறிவைத்து சீனர்கள் இந்த கடன் செயலியை இயக்கி வருகின்றனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகின்றது," என்று ஆணையர் மேலும் கூறினார். மேலும் இணையம் மூலம் கடன் வழங்கி அதனைத் திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தி அதனால் தற்கொலைக்கு வரை சென்ற பல வழக்குகள் இருக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News