Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: பரிசோதனைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: பரிசோதனைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 May 2021 4:09 PM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்வதற்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி கொடுத்துள்ளது.





தற்போது 2ம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவெக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News