Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதி - சீனா ஆதரிக்கிறதா?

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிரான தீர்மானத்தை போடுவதற்கு சீனா எதிர்ப்பு.

மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதி - சீனா ஆதரிக்கிறதா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Sep 2022 12:34 AM GMT

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதியை அமைப்பின் முக்கிய தளபதியாக சஜித் மிர் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க அமெரிக்க மற்றும் இந்தியா சார்பில் ஐக்கிய நாட்டு சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பித்தல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஐக்கிய நாட்டு சபை பாதுகாப்பு கவுன்சிலியங்களில் ஒரு நிரந்தர உறுப்பினராக சீனா இந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டது.


இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா கொண்டு வந்த தீர்மானங்களுக்கு இதைப் பற்றி சீனா முட்டுக்கட்டை போட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜீத் எதிரான தீர்மானத்தை தடுப்பதை சீனா நியாயப்படுத்தி உள்ளது. இந்தியாவின் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட இத்தகைய தீவிரவாதியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா மறுப்பு தெரிவிப்பது அனைவரிடத்தில் அதிருப்தியில் ஏற்படுத்த இருக்கிறது.


இது பற்றி விளக்கம் அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க சீனா எப்பொழுதும் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்புள்ள முறையில் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சிலிங் பணிகளில் பங்கு இருக்கிறது. அந்த வகையில் சஜித் தீர்மானத்தில் சீனாவில் நடவடிக்கைகள் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஒத்துப் போகின்றன என அவர் தன்னுடைய கருத்தை சீனாவின் சார்பில் தெரிவித்து இருந்தார்.

Input & Image courtesy: Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News