Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெய் ஸ்ரீ ராம் உச்சரிக்க கூடாது: மாணவர்களை துன்புறுத்திய கிறிஸ்தவ பள்ளி!

ஜெய் ஸ்ரீ ராம் உச்சரிக்க கூடாது: மாணவர்களை துன்புறுத்திய கிறிஸ்தவ பள்ளி!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2022 7:58 AM GMT

ஜெய் ஸ்ரீ ராம் என்று உச்சரிக்க கூடாது என்று மாணவர்களை கிறிஸ்தவ பள்ளி ஒன்று துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், பாபியில் எஸ்.டி. மேரி என்ற கிறிஸ்தவ ஆங்கிலப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு ஒன்பதாம் வகுப்பு படித்த கிருஷ்ண பிரசாத் மற்றும் சுலோக் சவுத்திரி ஆகியோர் கடந்த 11ம் தேதி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டனர். இதை கண்டித்த ஆசிரியர் கல்பேஷ் ராகேஷ், இனிமேல் பள்ளியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லக்கூடாது எனவும், மாணவர்களிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுத வைத்துள்ளார்.

பள்ளியின் நடவடிக்கையை கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக இந்து அமைப்பிடம் பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளி முன்பாக நூற்றுக்கணக்கான இந்து அமைப்பினர் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். மேலும், பள்ளி செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம் இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாது என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

Source, Image Courtesy: Thamarai Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News