Kathir News
Begin typing your search above and press return to search.

இப்படி ஒரு நுட்பம் இந்தியாவால் மட்டுமே சாத்தியம் - பிரமித்து பார்க்கும் காமன்வெல்த் நாடுகள்!

இப்படி ஒரு நுட்பம் இந்தியாவால் மட்டுமே சாத்தியம் - பிரமித்து பார்க்கும் காமன்வெல்த் நாடுகள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Oct 2022 9:09 AM IST

யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. யுபிஐ வந்த பிறகு பணப்பரிமாற்றம் எளிமையாக மாறியது. இப்போது பெட்டிக்கடை முதல் பெரிய அளவிலான வணிகப் பரிவர்த்தனை வரையில் யுபிஐ பணப்பரிமாற்றம் வந்துவிட்டது. யுபிஐ கட்டமைப்பில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

தொழில்நுட்ப பகிர்வு

மற்ற நாடுகளுடன் யுபிஐ தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவின் முடிவை காமன்வெல்த் பொதுச் செயலர் பாட்ரிசியா ஸ்காட்லாந்து வரவேற்றுள்ளார். இந்தியாவின் பெருந்தன்மையை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா போல வேறு சில நாடுகளும் யுபிஐ தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. ஆனால், இந்தியாதான் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது. அதை பகிரவும் முன்வந்துள்ளது என்றார்.

பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்

யுபிஐ தொழில்நுட்பத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்வது டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் லட்சக்கணக்கான மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளது. மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக உதவித் தொகையை அனுப்புவதால், பணம் மக்களின் கைகளுக்கு உடனடியாக சென்று விடுகிறது என பாராட்டி உள்ளார்.

Input From: BusinessLIne


Next Story
கதிர் தொகுப்பு
Trending News